25.09.2022 அன்று நடைபெற்ற 385-வது கூட்டம்

25.09.2022 அன்று நடைபெற்ற 385-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
25.09.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 385-ஆவது காணொலிக் கூட்டம்
25.09.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு புலவர்
த. இராமலிங்கனார் அவர்கள் தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள் நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்கினார்.
சிறுகதைச் சீமாட்டி கவிஞர் (எழுத்தாளர் லண்டன்) பிரிட்டானியாவில்
புலம்பெயர் படைப்பு இலக்கியம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இவரது சிறப்புரையை புலவர் த. இராமலிங்கனார், மு. ஆறுமுகப்
பெருமாள், முனைவர் தண்டபாணி, கண்மதியன், இரா. மோகனசுந்தரம்
ஆகியோர் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவடர்களின் கண்டு சொல் – வென்று செல்
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.