
23.10.2022 அன்று நடைபெற்ற 388-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
23.10.2022 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 388-ஆவது காணொலிக் கூட்டம்
23.10.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி தொடக்க
உரை ஆற்றினார்.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் தலைமை ஏற்று
தலைமை உரையும், வரவேற்புரையும் ஆற்றினார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் பேரா. ச. கந்தசாமி (இணைப் பேராசிரியர்
மற்றும் தலைவர், வங்கி மேலாண்மைத் துறை, திருதிங்கால் நாடார்
கல்லூரி, சென்னை – 51) மாக்கவி பாரதியின் கவிடத்திறன் என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
திருவாளர்கள் குடியாத்தம் குமணன், மா. சிவஞானம், மு. ஆறுமுகப்
பெருமாள், ச.ச. மணிமேகலை, ஸ்ரீமதி ஆகியோர் சிறப்புரை ஆற்றிய பேரா.
ச. கந்தசாமி அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல் வென்று செல்”
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியாக பேரா. ச. கந்தசாமி ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டடம் இனிதே நிறைவுற்றது.
