19.01.2025 அன்று நடைபெற்ற 414-ஆவது மாதாந்திர கூட்டம்

19.01.2025 அன்று நடைபெற்ற 414-ஆவது மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 19.01.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சனவரி மாத சிறப்பு நிகழ்ச்சி 19.01.2025 அன்று நடைபெற்றது.

மாணவ மாணவிகள் தமிழ் வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்கியது.

செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்றும் போது, தலைவர் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது ஓய்வு எடுத்தக் கொண்டிருப்பதால், துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டிக் கொண்டார். மேலும் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மறைமலை அடிகளார் விருதினை அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்களுக்கு அளிக்கப்பட்டதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

முதலாவதாக அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தனது கொஞ்சும் மழலை மொழியில் திருக்குறள் ஒப்புவித்தனர்.

தொடர்ந்து பொங்கல் திருநாள் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. சோலை தமிழினியன் கவியரங்கை நெறிபடுத்தி நடத்தினார்.

நிகழ்ச்சியில், நமது சங்கத்தின் புரவலர் அரிமா த.கு. திவாகரன் அவர்களின் பவன விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பவள விழா காணும் புரவலர் அரிமா த.கு. திவாகரனை பாராட்டி கவிஞர் கண்மதியன். இரா. மோகனசுந்தரம், பாக்டர் பு.பெ. இராமசாமி, த. வடிவேலு, பன்னீர்செல்வம், து.சி. இராமலிங்கம், திருமதி பாரத தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அரிமா த.கு. திவாகரன் ஏற்புரை நிகழ்ந்த, பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது