

15.12.2024 அன்று நடைபெற்ற 413-ஆவது டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சனவரி மாத சிறப்பு நிகழ்ச்சி 15.12.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 10-ஆவது டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் டிசம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 15.12.2024 அன்று நடைபெற்றது.
மாணவ மாணவிகள் தமிழ் வாழ்த்து பாட நிகழ்ச்சி தொடங்கியது.
முதலாவதாக நமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும் அண்ணாநகர் திருநெறிய தமிழ்மன்றத்தின் நிறுவனருமான திரு. வி. நடராசன். ஐ.ஏ.எஸ். அவர்களின் மறைவுக்கும், அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் நீத்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டன.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்று இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த குகேஷுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்த, சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் தலைவர் புலவர் த.இராமலிங்களார் தலைமை தாங்கினார்.
‘வையத் தைைலமை கொள்’ என்னும் தலைப்பில் தென்காசி கணேசன் உரையாற்றினார். சோலை தமிழ்னியன் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் பாரதியார் ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகு என்னும் தலைப்பை மையமாக கொண்டு சிறந்ததொரு உரையாற்றினார்.
சோலைப் பதிப்பகம் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு நூல்கள் அண்டிப் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளி மாணவ மணற் “மாணவர்அரங்கம்” சிறப்பாக நடைபெற்றது. இதில், பாரதியார் பாடல்கள், பாரதியாரின் புதிய ஆத்திசுடி ஆகியவை 20 மாணவர்களால் சிறப்பாக வழங்கப்பட்டன.
இறுதியில் டி.பெ. இராமசாமி அவர்களன் நடத்திய கண்டு சொல் வென்று சொல் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கப் பொருளாளர் திரு. கோ.ஞானப்பிரகாரம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுள்ளது
