
16.03.2025 அன்று நடைபெற்ற 416-ஆவது மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத சிறப்பு நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 416-ஆவது மார்ச் மாத நிகழ்ச்சியானது 16.03.2025 அன்று நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு வரவேற்புரையாற்ற துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியில் பெண்களைப் போற்றும் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கை து.சீ. இராமலிங்கம் நெறிபடுத்தினார். இதில், கல்யாணராமன் நாகராசன், ஜீவா காசிநாதன், சுமத்ரா கோவிந்தாசாமி, ‘பரணி’ இராமமூத்தி, அதியமான், தண்ணீர்க்குளம் தாசன், இரா. சக்கரபாணி, ஆர். சிவராமலிங்கம் ஆகியோர் கவிதை வாசித்தனர். சிறந்த ஐந்து கவிஞர்களுக்கு தலா ரூ. 500/- பரிசினை முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து ‘இன்றைய பெண்கள் … பொறுமைசாலிகளா? திறமைசாலிகளா?’ தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு சோலை தமிழினியன் நடுவராகவும், அணியில், தேன்மொழி எத்துராசன், ந. செல்வமணி, முனைவர் கீதப்ரியா. வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர். பட்டிமன்றத்தில் பங்கேற்றவர்களுக்கு சங்கத்தின் இணைச் செயலாளர் த. வடிவேலு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கிருஷ்ணவேணி அருணாச்சலம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கப் புரவலர் டாக்டர் பு.பெ. இராமசாமி வினாடி வினா நிகழ்ச்சியை நடத்த, சங்கப் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்
