அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது


17.08.2025 அன்று நடைபெற்ற 421 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது

17.08.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்
அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 17.08.2025 அன்று நடைபெற்றது

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின்
421-ஆவது மாத நிகழ்ச்சி
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 421-ஆவது மாத நிகழ்ச்சியானது
17.08.2025 அன்று நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜூலு வரவேற்புரையாற்ற,
சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன்
தலைமையேற்றினார்.
நிகழ்ச்சியில், வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் மருத்துவம் என்ற தலைப்பில்
சென்னை தோல் மருத்துவ மைய இயக்குநரும், “டாக்டர் வள்ளுவர்” நூலின்
ஆசிரியருமான டாக்டர் முருகு சுந்தரம் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் சார்பில்
சிறப்பு விருந்தினருக்கு தமிழ்க் கடிகாரமும், சோலைப் பதிப்பகம் சார்பில்
புத்தகங்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இதனை, சங்கச் செயலாளர்
அரிமா துரை. சுந்தரராஜூலு, கலைமாமணி ஏர்வாடியார், முனைவர் அமுதா
பாலகிருஷ்ணன், சோலை தமிழினியன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் இம்மாதம் புதிதாக உறுப்பினராக இணைந்த திருமதி.
க. ஜெயஸ்ரீ சிறப்பிக்கப்பட்டார். சங்கத்திற்கு அறிமுகம் செய்த, சங்க இணைச்
செயலாளர்த. வடிவேலு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.
நமது சங்க செயற்குழு உறுப்பினரும் இலக்கியசோலை திங்களிதழின்
ஆசிரியருமான சோலை தமிழினியன் அவர்களுக்கு சிறந்த சிற்றிதழுக்கான
விருதினை தேனி கம்பம் பாரதி இலக்கியப் பேரவை 15.08.2025 அன்று வழங்கி
சிறப்பித்தது. அவரைப் பாராட்டும் விதமாக சங்கத்தின் செயலாளர் சால்வை
அணிவித்து பாராட்டினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர் பி.பி. இராமசாமி அவர்கள் கேள்வி நேரம்
நடந்தேறியது.
சங்கத்தின் பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது.






















