17.11.2024 அன்று நடைபெற்ற 412-ஆவது நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

17.11.2024 அன்று நடைபெற்ற 412-ஆவது நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 412-ஆவது நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 17.11.2024 அன்று நடைபெற்றது.

திரு. சோலை தமிழினியன் தமிழ்த் தாய் வாழ்த்து பாட சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுது வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இலக்கியச் சோலை திங்கள் இதழின் ஆசிரியருமான திரு. சோலை தமிழினியன் அவர்களின் அருமை தாயார் திருமதி. சரோஜா அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அவைக்கு அறிவித்து அள்ளாருடைய ஆத்மா சாந்தி அடைய உறுப்பினர் அனைவரும் சில மணி துளிகள் எழுந்து நின்று இரங்கலை தெரிவித்தனர். சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் தலைவர் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார்.

கவிமணியின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும்‘ என்னும் தலைப்பில் பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பின் நிறுவனத் தலைவர் தமிழ்முகில் திருளை பாபு உரையாற்றினார்.

தனது உரையில், “குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பானை அறிமுகம் செய்தவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்றும். தான் ஒரு கவிஞர் என்பதைக் காட்டிலும் கல்வெட்டுக் கலைஞர் என்று அழைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். காரணம் எந்த கோவில்களில் கல்வெட்டை பார்த்தாலும் தங்கு தடையின்றி சரளமாக படிக்கும் ஆற்றல் உடையவர் கவிமணி” என்றார்.

முத்தாய்ப்பாக, 1940-அபம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர் குழு மாநாட்டில் தமிழ்வேள் உ மகேஸ்வரன் அன்னை அவர்களால் ‘கவிமணி” என்னும்ய் பட்டடம் கொடுக்கப்பட்டதாகவும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புனைம வாய்ந்தவராகத் திகழ்ந்தவர் என்றும் ஆங்கிலத்தில் தான் எழுதிய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வைத்திதந்தார் என்று அறியப்படுவதாக தனது சிறப்புரையில் திருவை பாபு தெரிவித்திருந்தார்.

சோலைப் பதிப்பகம் சபில் சிறப்பு விருந்தினராக அன்புப் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் 25.11.2024-ல் பிறந்தியால் கணையிருக்கின்ற சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலூ சிறப்பு விருந்தினர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சங்கப் வாஜனானர் திரு. கோ.ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்ற