
21.01.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.01.2024

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ். தன்வந்த் தமிழ் வாழ்த்து பாட சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனைவர் அரிமா துரை, சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்த “மனிதநேயம் வளர்ந்திருக்கிறதா? தளர்ந்திருக்கிறதா?” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக பேராசிரியர் முனைவர் கே. ஈஸ்வரி அவர்களும், அணியின் சார்பில் பேராசிரியர் க.கி. முருகானந்தம், வை. இராஜேஸ்வரி. பேராசிரியர் யோ.சா. இராசேந்திரன் முனைவர் இரா. பூங்கோதை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இலக்கியச் சோலை திங்களிதழின் பொங்கல் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனை சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் வெளியிட பிரதிகளை சங்கச் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு, புரவலர் அரிமா த.கு. திவாகரன், துணைச் செயலாளர் வடிவேலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி. பாரததேவி நன்றியுரை நிகழ்ந்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
