18-10-2020-அன்று நடைபெற்ற 342-வது கூட்டம்

18-10-2020-அன்று நடைபெற்ற 342-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.10.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 342-ஆவது கூட்டம் இணைய வழி
மூலம் 18.10.2020-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச் சங்கத்தின்
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் இருந்து வழக்கறிஞர்
கவிஞர் கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு “சங்கத்தமிழ்” என்னும்
தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சங்க
இலக்கியம் பல நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளில்
இருந்ததாகவும், அதில் பல தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாகவும், பல
ஓலைச்சுவடிகள் மக்களின் அறியாமை காரணமாக நெருப்பில் எரிக்கப்பட்டு
விட்டதாகவும் கூறி, மீதமுள்ள கையில் கிடைத்த ஓலைச் சுவடிகளில்
இருந்துதான் தற்போது கிடைத்துள்ள சங்க இலக்கியங்கள் வழக்கத்தில்
உள்ளன. அவர் பேசுகையில் தமிழ் இலக்கியங்களில் உள்ள அனைத்து
பாடல்களையும் பட்டியலிட்டு ஒவ்வொரு தலைப்புக்கும் சிறந்த உரை
விளக்கத்தை தொகுத்துக் கூறினார். தமிர்களின் சங்க கால வாழ்க்கை,
அவர்களின் தொழில் மற்றும் பல்வகை நிலங்கள், பூக்கள் போன்றவைகளை
எடுத்துக் கூறினார். கலைஞர் தனது சங்கத்தமிழில் 99 வகையான பூக்களின்
பெயரோடு தொடங்கி இருப்பார் என்று கூறி அவையோரை தன்
வயப்படுத்தினார்.
ஒளவையார் தொடங்கி பல சங்ககாலப் புலவர்களைப் பட்டியலிட்டு,
அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை உள்ளிட்ட பல இலக்கியங்களில்
உள்ள நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு
நன்றி கூறினார். அரிமா முனைவர் த.கு. திவாகரன் பேசும்போது, சிறப்பு விருந்தினரை
அறிமுகப்படுத்தினார். சங்க இலக்கியத்தின் மேன்மையை எடுத்துக்கூறி 99
பூக்களின் பெயர்களையும் கூறினார்.
தலைவர் பேசும்போது சிறப்பு விருந்தினரை வெகுவாகப் புகழ்ந்து
பேசினார். சங்க இலக்கியங்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கூறி
உறுப்பினர்களை நேரில் காணும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
வரவேற்புரை ஆற்றிய செயலாளர் அரிம துரை. சுந்தரராசன் அக்டோபர்
மாதம் பிறந்தநாள் காணும் உறுப்பினர்களை வாழ்த்திப் பாராட்டினார்.
இதுவரை சங்கத்தில் பல தமிழறிஞர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட
சில பாடல்களை எடுத்து பேசினார்கள் என்றும், ஆனால் இப்போது கவிஞர்
கனிமொழி அவர்கள் அனைத்து பாடல்களையும் குறிப்பிட்டு விளக்கி
கூறியது பெருமைப்பட கூடியதாகும். தலைவருடைய 89-ஆம்
பிறந்தநாளுக்கு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அடுத்த கூட்டம் குறித்து செயலாளர் அறிவித்து அதுவும் இணையவழி
மூலம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆஸ்த்திரேலியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ்
ஆர்வலர்கள் கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிறைவாக பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வந்திருந்த
அனவைருக்கும் நன்றிகூற இணையவழிக் கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.