20-09-2020-அன்று நடைபெற்ற 340-வது கூட்டம்

20-09-2020-அன்று நடைபெற்ற 340-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.09.2020 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 340-ஆவது கூட்டம் இணைய வழி
மூலம் 20.09.2020-ஆம் நாளன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்ச் சங்கத்தின்
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிமாமணி
முனைவர் ம. வேலூர் நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு “இலக்கிய
இன்பம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில் தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களை
தொகுத்துக் கூறினார். கனியன் பூங்குன்றனார், ஒளவை, பாரதியார்,
பாரதிதாசன், க.ப. அறவாணன், கவிஞர் சுரதா போன்ற பல கவிஞர்கள்
கூறிய செய்திகளை மிக அருமையாக தொகுத்து கூறினார். இதற்குச்
சான்றாக வலராற்று செய்திகளை நந்திக் கலம்பகம், சீவக சிந்தாமணி
போன்ற பாடல்களை எடுத்துக் கூறி அவையோரை மகிழ்ச்சியில்
ஆழ்த்தினார்.
முன்னதாக வரவேற்பு ஆற்றிய செயலாளர் செப்டம்பர் மாதம் பிறந்தநாள்
கண்ட உறுப்பினர்களை வாழ்த்திப் பாராட்டினார். மேலும் இது அண்ணா
பிறந்த மாதம் என்பதால், அண்ணாவைப் பற்றி சில வார்த்தைகளை பகிர்ந்து
கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன்
அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அண்ணாவைப் பற்றி பல்வேறு
செய்திகளை கூறினார்.
விருந்தினரும் தந்தை பெரியார் பிறந்த மாதம் என்பதால் பெரியாரை
பற்றி கவிதை வாசித்தார்.தலைவர் பேசுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு உறுப்பினர்களை
சந்திக்கும் வாய்பை ஏற்படுத்தித் தந்த முனைவர் த.கு. திவாரகரன்
அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிறப்பு விருந்தினரின் பேச்சு அருமையாக
இருந்ததாக பாராட்டினார்.
கவிஞர் கலாவதி குலசேகரன், திரு.ஜோதிமணி, து.சீ. இராமலிங்கம், மு.
நாமதேவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இத்தகைய அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணாநகர்த்
தமிழ்சங்கத்திற்கு சிறப்பு விருந்தினர் நன்றி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழ்
ஆர்வலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிறைவாக பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வந்திருந்த
அனவைருக்கும் நன்றிகூற இணையவழிக் கூட்டம் இனிதே
நிறைவடைந்தது.