16.06.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

16.06.2024 அன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் நவம்பர் மாத சிறப்பு நிகழ்ச்சி 16.6.2024 அன்று நடைபெற்றது.

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் ஜூன் மாத சிறப்பு நிகழ்ச்சி 16.06.2024 அன்று நடைபெற்றது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் அரிமா து. சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜூன் 16 உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு கவிஞர்கள் அ. சக்தி,சோம. பாலகுரு ஆகியோரும். ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நம்ம ஊர் கோபிநாத் அவர்களும் கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரின் தமிழ்த் தொண்டு தலைப்பில் சிலம்புச்செம்மல் புலவர் தமிழமுதன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் உரையில், “அப்பாதுரையார் தான் இந்தி ஆசிரியராக இருந்தாலும், தமிழின் பால் அவர் கொண்டிருந்து நேசத்தால், பேரறிஞர் அண்ணாவுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தேர்ந்த தமிழறிஞர்” என்று புகழ்ந்துரைத்தார்.

நிகழ்ச்சியில் “கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தத்துவப் பாடல்களா? காதல் பாடல்களா?” என்கின்ற தலைப்பில் சோலை தமிழினியன் நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், திருமதி தேன்மொழி பிரகாஷ், ந. செல்வமணி. க.ஜெகதீஸ்வரன். குருசங்கர் ஆகியோர் உரையாற்றினார்.

சங்கப் பொருளாளர் திரு. கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை நிகழ்த்த. நிகழ்ச்சி இனிதே நிறைவும்மது