21.05.2023 அன்று நடைபெற்ற 395-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது – 21.05.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி 21.05.2023
அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜுலு
வரவேற்புரை நிகழ்த்த, திரு. சொ. பத்மநாபன் திருக்குறள் வாழ்த்துப்
பாடினார்.
இதில், இலக்கியச் சோலை திங்களிதழின் அண்ணாநகர் சிறப்பிதழ் மதிப்புரை
செய்யப்பட்டது. இதனை திரு. முயற்சி முருகேசன் நிகழ்த்த, ஆசிரியர் சோலை
தமிழினியன்
ஏற்புரை வழங்கினார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் க.கி. முருகானந்தம் தலைமையில் “குடும்
வாழ்க்கை சிறப்புற பெரிதும் துணை புரிவது அன்னையின் அரவணைப்பா? தந்தையின்
கண்டிப்பா? தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. அன்னையர் தினத்தைப்
போற்றம் வகையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அன்னையர்க்கும் திராவிட முழக்கம்
வலையொளி ஊடகத்தின் நிறுவனர் திரு. ஞானபாலன் அவர்களுக்கும் சால்வை
அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பொருளாளர் திரு.கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரை
நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைடைந்தது.