

20-03-2022-அன்று நடைபெற்ற 374-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.03.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 374-ஆவது காணொலிக் கூட்டம்
20.03.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார்
தலைமை உரை ஆற்ற நடைபெற்றது
செயலாளர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர்
த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகத் திகழ்ந்தார்.
செயலாளர் வரவேற்புரையில் அரிமா முனைவர் த.கு. திவாகரன் அவர்கள்
43-ஆவது திருமண நாள் விழா கொண்டாடியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இணைச் செயலாளர் திரு. த. வடிவேலு அவர்களின் தாயார் திருமதி
இராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் மறைவு ஒட்டி அவருக்குச் சிலமணித்
துளிகள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்பு சொற்பொழிவாளர் கல்வி ரத்னா, அம்பாசிடர் முனைவர் ரவி.
கோவிந்தராஜ் அவர்களை அறிமுகம் செய்தார். முனைவர் ரவி. கோவிந்தராஜ்
அவர்கள் மனிதவேள மேம்பாட்டு பயிற்சி துறையிலும், கத்தார் ஆம்பல்
தமிழ்ச்சங்கத்திலும் தலைவராக உள்ளார். ஆம்பால் போல வாழும் தமிழும்,
தமிழனும் என்றும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆற்றிய உரையின் சில பகுதிகள்:
நூல்களைப் படிப்பர்களே தலைமை தாங்கம் பண்பு கொண்டவர்கள். தகடூர்
அதியமானும் ஒவையாரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர்.
தொண்டை மண்டலத்திற்கு தூதுவராகச் சென்று போரை தடுத்து நிறுத்திவயர்.
உழவர் பெருமக்கள் போற்றும் நாள் பொங்கல் பண்டிகையாகும். மாட்டுப்
பொங்கல் கொண்டாடுவது மனிதநேயப் பண்பாட்டைக் குறிக்கிறது.
இவரது சிறப்புரையை துரை. சுந்தரராஜூலு, புலவர் த. இராமலிங்கம், ஸ்ரீமதி,
சுரேஷ் (நாமக்கல்) து.சீ. இராமலிங்கம், மணிமேகலை ஜோதிமணி, பேரா. க.
ரேவதி, மு. ஆறுமுகப்பெருமாள், சாந்தகுமாரி எத்திராசன், த.கு. திவாகரன்,கண்மதியன், விருதுநகர் ஆம்பல் தமிழ்ச்சங்கம், பசுபதி, துபாய் சந்தியா,
மறத்தமிழன் ஆகியோர் பாராட்டியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
முனைவர் ரவி. கோவிந்தராஜ் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்கள் “கண்டு சொல்-வென்று செல்” என்னும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
