06-03-2022-அன்று நடைபெற்ற 373-வது கூட்டம்

06-03-2022-அன்று நடைபெற்ற 373-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
06.03.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 373-ஆவது இணையவழிக் கூட்டம்
06.03.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
செயலாளர் துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் சிறப்புப்
பட்டிமனிறத்தில் பங்கு பெறுவோர் மற்றும் நடுவர் கவிஞர் தூயவன் குறித்து
அறிமுக உரை ஆற்றினார். மகளிர் தினத்தை ஒட்டி (8.3.2022) மகளிருக்கு
மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இன் கூட்டத்தில் சிறப்புப் பட்டிமன்றம் செந்தமிழ்ச் செல்வன் கவிஞர் தூயவன்
நடுவராக விளங்க இன்றைய இளைஞர்கள் தமிழை அரவணைக்கிறார்களா!
புறக்கணிக்கிறார்களா! என்னும் தலைப்பில் நடைபெற்றது.
புறக்கணிக்கிறார்கள் என்னும் தலைப்பில் இடம் பெற்றோர்:
1) ப. பவித்ரா, B.A., அரியலூர்

2) கி. அஸ்வினி, B.A.,கவசம்பட்டு

3 ரா. மோனிஷா, B.A.,ஆரணி
அரவணைக்கிறார்களா என்னும் தலைப்பில் இடம் பெற்றோர்:
1) சௌமியா சிவராஜ், B.Com., MBA.

2) மு. கிருத்திகா, M.Sc., சேலம்

3) நா. பிரீத்தா, B.Sc., குமாரபாளையம்
இரு அணியினரும் தமது அணியின் சார்பாக சிறப்பாக வாதாடினார்கள். இரு
அணியினரின் வாதத்திறமை மிகவும் அருமையாக இருந்தது. இரு தரப்பு
அணியினரின் விவாதங்களை கேட்ட நடுவர் அவர்கள் செந்தமிழ்த் திருத்தேர்
என்ற அமைப்பும் தூய தமிழ்ப் பற்றாளர்களை ஒருவாக்குவதாகக் கூறி
இன்றைய இளைஞர்கள் தமிழை அரவணைத்துக் கொண்டு இருக்கிறார்கள்
என்று தீர்ப்பை வழங்கினார்.

செயலாளர் துரை. சுந்தரராஜுலு, ஜீவகன், சுரேஷ் சுப்பிரமணியம், திரு.வி.க.
பேச்சுப் பயிலரங்கம், மணிமேகலை, கண்மதியன், சரண்யா ஆகியோர்
பட்டிமன்ற நிகழ்வைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.