
18.12.2022 அன்று நடைபெற்ற 390-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.12.2022 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 390-ஆவது மாதாந்திரக் கூட்டம்
18.12.2022 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை,
கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
அரிமா முனைவர் துரை. சுந்தரராஜூலு அவர்கள் வரவேற்புரை ஆற்றி
சிறப்புச் சொற்பொழிவாளர் கவிஞர் தமிழ் இயலன் (இயக்குநர், நான் ஒரு
ஐ.ஏ.எஸ். அகாடமி) அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார் அவரது குடும்ப
நிகழ்வில் பங்கேற்றதால் அவரது தலைமை உரையை இரா.
மோகனசுந்தரம் படித்தார்.
புலவர் தங்க ஆறுமுகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஒவை நடராசன், புலவர் தங்க ஆறுமுகனார் மனைவி கமலம்மாள்,
செயற்குழு உறுப்பினர் இரா. பூபாலன் ஆகியோரின் மறைவுக்கு மௌன
அஞ்சலி செலுத்தப்பட்டது.
கவிஞர். தமிழ் இயலன் அவர்கள் “புனைந்துரையேன்; பொய்ப்புகலேன்”-
என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இராமலிங்க அடிகளார் சமூகப்
புரட்சி செய்தவர் என்றும் பசிப்பிணி போக்கிய மருத்துவர் என்னும் தம்
உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது உரையைப் பாராட்டியும், வாழ்த்தியும் இல. வெங்கடேசன், இரா.
மோகனசுந்தரம், முயற்சி முருகேசன், குடியாத்தம் குமணன்,
ச. கலியமூர்த்தி, அரிமா முனைவர் த.கு. திவாகரன் ஆகியோர் பேசினார்.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நன்றி கூற கூட்டம் இனிதே
நிறைவுற்றது.
