22.01.2023 அன்று நடைபெற்ற 391-வது கூட்டம்

22.01.2023 அன்று நடைபெற்ற 391-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
22.01.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 391-ஆவது மாதாந்திரக் கூட்டம்
22.01.2023 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு புலவர் த.
இராமலிங்கனார் தலைமை ஏற்க, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் நடைபெற்றது.
செயலாளர் அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு அவர்கள் தொடக்க
உரை ஆற்றி வரவேற்புரையும் ஆற்றினார். இதனைத் தொடர்ந்து,
செயற்குழு உறுப்பினர் திரு. அ. சீனிவாசன் அவர்களும் வரவேற்புரை
ஆற்றினார்.
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு. தணிகாசலம், கந்தசாமி
நாயுடு கல்லூரி பணியாளர் திரு. ராகவலு ஆகியோருக்கு அவர்கள்
இயற்கை எய்தியதாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் திரு. த. இராமலிங்கனார் தம் தலைமை உரையில் சிறப்புச்
சொற்பொழிவார் பேரா. முனைவர் மு. முத்துவேலு, (பதிவாளர், மதிதிய
செம்மொழி ஆய்வு மன்றம்) அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பேரா. முத்துவேலு அவர்கள் திருவள்ளுவர் திருநாள் குறித்து சிறப்புரை
ஆற்றினார்.
பேரா. மு.முத்துவேலு அவர்களது சிறப்புரையை பாராட்டியும், வாழ்த்தியும்
திருவாளர்கள் கலியமூர்த்தி, இலக்கியச் சோலை தமிழினியன்இ முயற்சி
முருகேசன், இரா. மோகன சுந்தரம், இல. வெங்கடேசன் ஆகியோர்
பேசினர்.
செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.