19.11.2017 அன்று நடைபெற்ற 310-வது கூட்டம்




அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 310-ஆவது கூட்டம் 19.11.2017
அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த புலவர் நன்னன் அவர்கள்
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வரவேற்புரை ஆற்றிய து.சீ.
இராமலிங்கம், நவம்பர் மாதம் பிறந்த உறுப்பினர்கள் பெயர்களை
குறிப்பிடதலைவர் அவர்களுக்கு சிறப்பு செய்தார்.
தலைவர் பேசுகையில் தனிமனித முன்னேற்றத்திற்கும், சமுதாய
முன்னேற்றத்திற்கும் கல்வி அடித்தளமாக உள்ளது என்றார். வீடுதோறும்
கல்வி கூடங்கள் அமைக்க வேண்டும் என்ற பாரதியின் கருத்தினை
எடுத்துக் கூறினார்.
சிறப்புப் பேச்சாளர் குமணன் தனது உரையை கவிதை மூலமாக
இசையுடன் பாடி அவையோரை வியப்பில் ஆழ்த்தினார். வீடு வரை
உறவு என்ற பாடலுக்குப் புதிய விளக்கம் தந்தார். வீரபாண்டிய
கட்டபொம்மன் வீர உரையையும் பேசிக் காட்டினார். கவிதை
உள்ளத்தைத் தைக்கக் கூடியது. தமிழில் சிந்தனைகள்
தெளிந்திருக்கிறது என்று கூறினார்.
சங்கத்தின் புரவலர் திரு. வே.சு. வேணுகோபால் தமிழ்ச்சங்க
அறக்கட்டளைக்கு ரூபாய் 5001/- நன்கொடை அளித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி வினாவிடை நிகழ்ச்சி நடத்தி பரிசுகள்
வழங்கினார்.
பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.





