17.11.2017 – 311- வது மாதாந்திரக் கூட்டம்

Photo with News - December 2017-3 Photo with News - December 2017-4Photo with News - December 2017-1Photo with News - December 2017-2

17.11.2017 – 311- வது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
17.11.2017 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 311-ஆவது கூட்டம் 17.12.2017
அன்று புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கப்
பொதுச்செயலாளர் “இதயகீதம்” இராமனுஜம் அவர்கள் “திசை காட்டும்
பாரதி” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். மொழி,
இலக்கியம் ஒப்பீடு இல்லாமல் இருந்த காலத்தில் லண்டன், சீனாவுக்கு
இடையில் ஒப்பாய்வு நடந்ததை சுட்டிக்காட்டி, அந்த ஒப்பாய்வில்,
இத்தாலிய நாட்டின் மாக்கியவல்லி, சீன நாட்டின் கன்பூசியஸ்,
இந்தியாவின் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களுடன்
திருக்குறளும் ஆய்வு செய்யப்பட்டது.
நீண்ட விவாதத்திற்குப்பின், நேர்மை, நியாயம், சத்தியம் முதலிய
நல்ல அம்சங்கள் கொண்ட திருக்குறள் தாதன் சிறந்த இலக்கியமாக
தேர்வு செய்யப்பட்டது எனத் தெரிவித்தார். இதைத்தான் பாரதியின்
வரிகள் திசை காட்டுகிறது. மேலும் பாரதி சொன்ன கருத்துக்களை
விரிவான விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
தலைவர் பேசுகையில், சிறப்பு சொற்பாழிவாளரை அறிமுகப்படுத்தி,
பாரதியாரின் 116 பிறந்தநாள் விழா நடைபெறுகிறது எனக்கூறி
பாரதியாரின் பல்வேறு கவிதைகளை நயமாக எடுத்துரைத்தார். அன்று
பாரதி கூறிய பண்டமாற்றுதல், நதிகளை இணைத்தல் போன்ற
கருத்துக்கள் இன்றும் பேசப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு
மாணவி ஹேமாவதி அவர்கள் பாரதயைப் பற்றி உணர்ச்சிகரமான
உரையாற்றினார். அவரைப் பாராட்டி தமிழ்ச்சங்கம், அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் பொன்னாடை மற்றும் நூல் பரிசாக
வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் சிலரும் ரொக்கப் பரிசும்
வழங்கினார்கள்.
ஸ்ரீ லங்கா நாட்டின் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர்
திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் தனது துணைவியார் சுமதி அவர்களுடன்
கலந்து கொண்டு சிறப்பித்தார்
அனைத்துலக தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்
போட்டியில் உலக அளவில் இரண்டாம் பரிசு பெற்ற முனைவர்
செங்கோட்டையன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக செயலாளர் அரிமா துரை சுந்தரராசன் வரவேற்புரை
ஆற்றி, டிசம்பர் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்களுக்குப்
பாராட்டுத் தெரிவித்தார்.
பொருளாளர் தி. ரங்கராஜன் அனைவருக்கும், குறிப்பாக நன்கொடை
வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கூட்டம் நிறைவடைந்தது.