21.8.16 – கம்பனின் கவிநயம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 21.08.2016 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 296-ஆவது மாதாந்திரக் கூட்டம் 21.08.2016 அன்று
துணைத் தலைவர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு
விருந்தினராக மக்கள் கவிஞர் மாமன்றத் தலைவர் பேரா. முனைவர் ஆ.இ. பாரதராசா
அவர்கள் கலந்து கொண்டு “கம்பனின் கவிநயம்” என்னும் தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார். கம்பராமாயணம் மிகப்பெரிய கடலென்றும் தனக்குத் தெரிந்த தகவர்களை கூறுவதாக தெரிவித்தார்.
இராமாயாணம் தொடங்குவதற்கான காரணத்தை கூறி, தொடர்ச்சியாக பல்வேறு
நிகழ்வுகளைக் கூறினார். இடையிடையே கம்ப இராமாயத்தில் இருந்து பல்வேறு பாடல்களை கையாண்டார். இராமன் இராவண யுத்தத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகவும் தத்ரூபமாக சொல்லியது அவையோரை வியப்பில் ஆழ்த்தியது. ஏறத்தாழ ஒரு மணிநேரம்
அவர் ஆற்றிய உரை அவையோரை தன் வயப்படுத்தியது.
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் தலைமை உரையில் முனைவர் பாரதராசா அவர்களை
அறிமுகப்படுத்தி கம்பனைப் பற்றி சிறப்பாக உரையாற்றினார். விழாவில் திரு. பாரதராசா அவர்களின் துணைவியார் பேரா. கயல்விழி மற்றும் மதுரை காமராசர் பல்கலைகழக பேரா. முனைவர் ரேணுகாதேவி ஆகியோர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்துப் பாராட்டப்பெற்றனர்.
முன்னதாக சங்கச் செயலாளர் துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஸ்ரீமதி வெங்கடாசலம் இணைச் செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


