20.05.2018 – அன்று நடைபெற்ற 316-வது கூட்டம்

Untitled-123456

 

20.05.2018 – அன்று நடைபெற்ற 316-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
20.05.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 316-ஆவது கூட்டம், தலைவர் புலவர்
த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில் 20.05.2018 அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக, அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ப. பானுமதி அவர்கள் “பாரதிதாசனின்
பெண்ணியம் போற்றுதல்” என்னும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.
பாவேந்தர் படைத்த “சஞ்சீவி பருவத்தின் சாரல்” என்ற நூலில் வரும்
சிறப்புகளை அழகுத் தமிழில் எடுத்துரைத்தார்.
கணவனை
இழந்த பெண்ணை கைம்பெண் என்று பெயரிட்டு, இந்தச்
சமுதாயம் கொடுமைப்படுத்தியதை தனது பாடல்கள் மூலம் வன்மையாக
கண்டித்தார் எனக் கூறினார். கலப்புத் திருமணம், காதல் திருமணம், மறுமணம்
ஆகியவற்றை வரவேற்றதையும் தெரிவித்தார். சாதி, சமய வேறுபாடற்ற புதிய
சமுதாயம் காண விரும்பினார் என்றும் குறிப்பிட்டார்.
தலைவர் தனது உரையில், பாவேந்தர் அவர்கள், தன்னை சிறந்த கவிஞர்
என்று அறிமுகப்படுத்திய பாரதியாரைப் போற்றும் வகையில் தனது பெற்றோர்
இட்ட கனகசுப்புரத்தினம் என்னும் பெயரைத் தவிர்த்து, பாரதிதாசன் என்ற
பெயரை மாற்றி வைத்துக் கொண்டார் என்று குறிப்பிட்டார். தமிழை
துறைதோறும், துறைதோறும் வளர்க்க இளம் தமிழர்களே வீழ்ந்து விடாதீர்கள்,
எழுந்திருங்கள் என்று தனது பாடல்களின் வைரவரிகள் மூலம் அறிவுரைத்ததை
நினைவுபடுத்தினார்.
முன்னதாக துணைத் தலைவர், முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். மே மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள்
பாராட்டப்பெற்றனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தி வெற்றி
பெற்றவருக்கு பரிசு வழங்கினார்.
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.