




15-12-2019-அன்று நடைபெற்ற 336-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
15.12.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை
புலவர் த. இராமலிங்கம், கோ. ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி
உடன் தலைவர் த. இராமலிங்கம்

சிறப்பு விருந்தினர் டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி
உடன் தலைவர் லவர் த. இராமலிங்கம், கோ. ஞானப்பிரகாசம்


கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
14.12.2019 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 336-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 15.12.2019
அன்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள்
“முதுமையை முறியடிப்போம்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தலைவர் பேசுகையில் கடந்த 40 ஆண்டுகளாக அண்ணாநகரில் வசித்து
வரும் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் முதியோர் நல
மருத்துவராக சிறப்புப் பயிற்சி பெற்று, அவர்களுக்காவே தனது வாழ்நாளை
அர்பணித்து வருகிறார். வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம் என்னும்
குறிக்கோளுடன் இவர் மருத்துவப் பணி ஆற்றி வருகிறார். ராஜீவ் காந்தி
அரசு மருத்துவமனையில் முதியோர் நலன் பிரிவைத் தொடங்க காரணமாக
இருந்தார். இவரது மருத்துவ சேவைக்காக மத்திய அரசு இவருக்கு
“பத்மஸ்ரீ” விருது வழங்கிப் பாராட்டியது.
சிறப்பு விருந்தினர் பேசுகையில் இந்த மன்றத்தில் பேச வாய்ப்பு
கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தார். இளமைப் பருவம், நடுநிலைப்
பருவம், முதுமைப்பருவம் என வாழ்க்கையை பிரிக்கலாம். முதுமையில்
இளமையுடன் இருப்போர் 35% சதவீதம் பேர் தான். முதுமையில் நோய்
வரக்காரணம், மரபணு முதல் காரணம். இவற்றை சுற்றுப்புறசூழல், நல்ல
பழக்கவழங்களின் மூலம் சரிப்படுத்தலாம். முதியோர் இல்லங்களே
தேவையில்லை என்ற நிலையை எடுத்துள்ளதாக கூறினார்.
பார்க்கின்சன் நோய், மறதி நோய், அடிக்கடி கீழே விழுவது
முக்கியமானது. சிறுநீரகத் தொற்று, பார்க்கின்சன் நடுக்கம் வருவது
இயற்கை. அலசீமர் என்னும் மறதிநோயை கண்டுபிடித்தவர் இந்த நோயின்
தாக்கத்தால் இறந்தார். மறதிநோய் வந்தால் இயற்கைக்கு மாறான
செயல்களைச் செய்வர். இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.
நடைப்பயிற்சி பேரூதவி செய்யும். தேங்காய் எண்ணை, உலர் திராட்சை,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கிரீன் டீ போன்றவைகள் மறதி நோயை தடுக்க
உதவும்.
கீழே விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம். விழாதே கீழே, தழுவாதே
மரணத்தை என்பதை வலியுறுத்தி உள்ளேன். சிறுநீர்க் கசிவு, புராஸ்டேட்
வீக்கட்ம வராமல் தடுக்க வேண்டும்.
முழு உடல் பரிசோதனை செய்து வருமுன் காக்க வேண்டும். புரோட்டீன்
உணவு அதிகமாக உண்ண வேண்டும். பருப்பு வகைகள், சிறுதானியங்கள்
செரிக்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அரிசி, உப்பு,
சர்க்கரை தவிர்க்க வேண்டும். பசித்தால் மட்டும் உண்ண வேண்டும்.
காலை நிறைந்த உணவு, மதியம் நடுத்தர உணவு, இரவு குறைந்த
உணவு என்ற அளவில் மென்று நிதானமாக உண்ண வேண்டும். உணவு
உண்ணடவுடன் படுக்கக்கூடாது. வயதானோர் நிமோனியா தடுப்பூசி
அவசியம் போட வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது மிகவும்
உதவிக்கரமானது. உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமாக பதில்
அளித்தார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு நூல் பரிசளித்தார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு வரவேற்புரை
ஆற்றினார். டிசம்பர் மாதம் பிறந்த நாள் கண்டவர்கள் பாராட்டப்பட்டனர்.
பொருளாளர் கோ. ஞானப்பிரகாசம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
துணைத்தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவடைந்தது.

திருமதி. மணிமேகலை கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
உடன் புலவர் பேரா. இரா. நாராயணன், புலவர் த. இராமலிங்கம், துரை, சுந்தர்ராஜன்

103-ஆவது பிறந்தநாள் விழாவின் போது கவிஞர் வாலி அவர்கள் அவரை பாராட்டி
எழுதிய கவிதையை திருமதி. மணிமேகலை கண்ணன் அவையோருக்கு வாசித்த காட்சி.
