13-02-2022-அன்று நடைபெற்ற 371-வது கூட்டம்

13-02-2022-அன்று நடைபெற்ற 371-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
13.02.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 371-ஆவது
காணொலிக் கூட்டம்
13.02.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்ற, செயலாளர் அரிமா
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர் த.கு.
திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து தொடக்க உரை
ஆற்றினார்.
செயலாளர் தம் வரவேற்புரையில் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின்
உறுப்பினரும் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலருமான திரு. சி.
பாலசுப்ரமணியம் 107-ஆவது வயதில் மறைவுற்றார் என்ற இரங்கல்
செய்தியை அறிவித்துத் தொடர்ந்து சிலமணித் துளிகள் அஞ்சலி
செலுத்தப்பட்டது.
சிறப்புச் சொற்பொழிவாளர் கவிஞர் கலாநிதி ஜீவகுமாரன் அவர்களை அரிமா.
த.கு. திவாகரன் அறிமுகம் செய்து வைத்து உரை ஆற்றினார்.
கவிஞர் கலாநிதி ஜீவகுமாரன் ஓர் எழுத்தாளர், குழந்தைகள் பராமரிப்பு சறிப்புக்
கல்வியாளர், டென்மார்க்கில் பிள்ளை வளர்ப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார். சிறப்புச் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் கவிஞர் கலாநிதி
ஜீவகுமாரன் சங்க உறுப்பினர்களிடம் கலுந்துரையாடினார்.
திருவாளர்கள் கூபர்ட், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜூலு, புலவர்
விஜயலட்சுமி, குடியாத்தம் குமணன், கோ. ஞானப்பிரகாசம், ந. பாபு, கௌரி
சிவபாலன் (ஜெர்மனி) ஆகியோர் சொற்பொழிவாளரை வாழ்த்தியும்,
பாராட்டியும் பேசினர்.
கவிஞர் கலாநிதி ஜீவகுமாரன் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.