10-10-2021-அன்று நடைபெற்ற 362-வது கூட்டம்

10-10-2021-அன்று நடைபெற்ற 362-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
10.10.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 362-ஆவது இணையவழிக் கூட்டம்
10.10.2021-ஆம் நாள் ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற,
செயலாளர் அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
Dr. A.J. ரத்தின பிரகாஷ், BNYS; M.D. (Naturopathy) அரசு யோகா மற்றும் இயற்கை
மருத்துவமனை, அரும்பாக்கம் வாழ்வியல் நோய்களும், வாழ்வளிக்கும்
“இயற்கை மருத்துவம்” என்னும் தலைப்பிலும்,
Dr. S. ஐஸ்வர்யா, BNYS; M.D. (Acupunture) அரசுயோகா மற்றம் இயற்கை
மருத்துவமனை, அரும்பாக்கம் “நோய்களைக் கொண்டாடுவோம்” என்னும்
தலைப்பிலும் சிறப்புவரை ஆற்றினார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் மண்குளியல் சிகிச்சை ஈரத்துண்டு
சிகிச்சை, கை, கால் சுடுநீர் சிகிச்சை, இடுப்பு குளியல் (B.P.) முதுகு தண்டு வட
குளியல், வாழை இலை குளியல், சிகிச்சையும் உடல் கழிவுகளை நீக்கவும், நீரிழிவு
நோய் மற்றும் சிறுநீரக் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
கூறினர்.
நோய் எதிர்ப்புக்கான சிகிச்சைகளும் தூக்கமின்மைக்கும், ஞாபக சக்திக்கும் சூரிய
ஒளி குளியல், காந்த சிகிச்சை, நறுமண சிகிச்சை, மன அழுத்தம் மற்றும் மன
அமைதிக்கும் சிகிச்சை அளிப்பதோடு பட்டைதீட்டிய அரிசி உடலுக்கு நன்மை
பயக்காது என்றும் தெரிவித்தனர். ஒரு நாளைக்கு 8 குவளைத் தண்ணீர்
குடிப்பதோடு இருமுறை உணவு உள்ள வேண்டும் என்பதையும் கூறினர்.
சங்க உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் பொருளாளர்
நன்றி கூறு கூட்டம் இனிதே நிறைவுற்றது.