21-10-2018-அன்று நடைபெற்ற 321-வது கூட்டம்


அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.10.2018 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 321-ஆவது கூட்டம் 21.10.2018 அன்று
தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருக்குறள் தூதர் சொ. பத்மநாபன் கலந்து கொண்டு
‘திருக்குறளில் “தலை” பற்றிய சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார்.
தலைவர் பேசுகையில், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
திருக்குறளில் பல்வேறு கருத்துக்களை பேசி இருந்தாலும் சிறப்பு விருந்தினர்
எடுத்துள்ள தலைப்பு சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டு, காமத்துப்பால் பேசியதை
வரவேற்றுப் பேசினார்.
திரு. சொ. பத்மநாபன் அவர்கள் பேசுகையில், திருக்குறளில் “தலை” என்ற
சொல் 38 இடங்களில் 41 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் திருவள்ளுவர் மனித உடலில் உள்ள அனைத்து
பாகங்களை குறித்தும் பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார். தலை முதல் கால்
வரையிலான அனைத்து பாகங்களையும் அந்தந்த குறட்பாக்களை மேற்கோள்
காட்டிப் பேசினார். குறிப்பாக காமத்துப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் பேசி
அவையோரைத் தன்வயப்படுத்தினார். “தலை” எனும் சொல் எந்த இடத்தில் எப்படி
பொருள் கொள்ளப்படும் என தக்க எடுத்துக் காட்டுகளுடன் கூறியது
அனைவரையும் வியக்க வைத்தது.
அண்மையில் மறைந்த திருவாளர்கள் கண்ணியம் குலோத்துங்கன், தமிழறிஞர்
கி.த. பச்சையப்பனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன் அவர்களின் துணைவியார்
தாமரைச்செல்வி ஆகியோருக்கு இரங்கல் தெவித்த பின், செயலாளர் வரவேற்புரை
ஆற்றினார். அக்டோபர் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி பரிசு
வழங்கினார்
பொருளார் கோ. ஞானப்பிரகாசம் நன்றி கூறுகையில், சங்க வளர்ச்சிக்கு ரூபாய்
ஐந்தாயிரம் நன்கொடை அறித்த உறுப்பினர் வடிவேலு அவர்களுக்கும் நன்றி
தெரிவித்தார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
























































































