22-08-2019-அன்று நடைபெற்ற 332-வது கூட்டம்

22-08-2019-அன்று நடைபெற்ற 332-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
22.08.2019 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 332-ஆவது கூட்டம், தலைவர்
தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் 22.08.2019
அன்று நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு எழுதிய
“நினைவில் நின்றவை” நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக
நடைபெற்றது. இந்நூலை மாண்புமிகு நீதியரசரும், டவர்ஸ் கிளப்பின்
தலைவருமாகிய திருமிகு. சு. இராஜேஸ்வரன் அவர்கள் வெளியிட்டார்.
திண்டிவனம் தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவரும், சிறந்த
கல்வியாளருமான செவாலியர் டாக்டர் இராஜாபாதர் அவர்கள்
முதல்படியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து
முனைவர் மறைமலை இலக்குவனார், கலைமாமணி ஏர்வாடி
இராதாகிருஷ்ணன், அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா வி.ஜி.
நரேந்திரபாபு, தமிழ்ச்சங்கத்தின் புரவலர் அரிமா முனைவர் த.கு. திவாகரன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பாரதி கலைக்கழகத்தலைவர் கவிமாமணி குமரிச்செழியன்
அவர்கள் நூலைப்பற்றி சிறந்த ஆய்வுரை வழங்கினார். நூலாசிரியர் அரிமா
முனைவர் துரை. சுந்தரராஜுலு ஏற்புரை வழங்கினார்.
தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. ஞானப்பிரகாசம் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர்
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். கவிஞர் து.சீ.
இராமலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இரவு உணவிற்குப் பின் விழா நிறைவடைந்தது.