20.07.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 20.07.2025 அன்று நடைபெற்றது

20.07.2025 அன்று நடைபெற்ற 420 ஆவது மாதாந்திரக் கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 420-ஆவது மாத நிகழ்ச்சி

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 20.07.2025 அன்று
சென்னை, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி அரங்கில்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் படத்திறப்பும்
நினைவேந்தல் நிகழ்வும் நடந்தேறியது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை
இயக்குநர் முனைவர் ஔவை அருள் படத்தினை திறந்து வைத்து
நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார். “பெருங்கவிக்கோவின்
பெருஞ்சுவர்” நூலினை பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
வெளியிட முதற்பிரதியினை திருமதி. பாரததேவி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர்
த. இராமலிங்கனார் தலைமை ஏற்க, செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரை நல்கினார். இலக்கியச்சோலை ஆசிரியர்
சோலை தமிழினியன் தொகுத்து வழங்க, பேராசிரியர் இராம.
குருநாதன், எல்லா ஆர். கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தமிழியலன்,
கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், அரிமா த.கு. திவாகரன்,
முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நினைவுரை
நிகழ்த்தினர். ஏற்புரையாக வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களும்,
முனைவர் வா.மு.சே. ஆண்டவர் அவர்களும் நிகழ்த்தினர்.
கோ. ஞானப்பிரகாசம் நன்றியுரையாற்றினார்.