
18-07-2021-அன்று நடைபெற்ற 355-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.07.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 355-ஆவது காணொலிக் கூட்டம்
18.07.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
அரிமா த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தொடக்க உரை ஆற்றினார்.
செயலாளர் துரை. சுந்தரராஜலு த வரவேற்புரை ஆற்ற, தலைவர் புலவர்
த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்றினார். மறை. தி. தாயுமானவன்,
மறைமலை அடிகளாரின் வாழ்வும், வாக்கும் என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார். இவர் தமிழ்நாடு அரசு வழங்கிய மறைமலை அடிகளாரின் முதல்
விருதாளர் ஆவார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
