
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது – 18.06.2023

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி 18.06.2023
அன்று சங்கத்தின் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அரிமா துரை.
சுந்தரராஜுலு வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில், தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தையர் என்னும் உறவைப் போற்றும்
கவிதையினை கவிஞர் சோலை தமிழினியன் மற்றும் கவிஞர் மறத்தமிழன் ஆகியோர்
வாசித்தனர்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு, கவிதைகளின் தந்தையெனப் போற்றப்படும் மகாகவி
பாரதியின் வரிகளைக் கொண்ட வல்லமை தாராயோ தலைப்பில் தந்தை, மகள், பெண்
சமூகம் குறித்தான சிறப்பானதொரு உரையை கவிஞர் சிவகாமி அருணன் நிகழ்த்தினார்.
முன்னதாக அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த வி. காவியா,
கே. விகாஷினி மற்றும் கலைமகள் வித்யாஷ்ரம் பள்ளியைச் சார்ந்த பெ. சனிசிதாஸ்ரீ
ஆகிய மாணவிகள் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தலைப்பில் உரையாற்றினார்.
சங்கத்தின் புரவலர் அரிமா முனைவர் த.கு. திவாகரன் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது.
