
26.02.2023 அன்று நடைபெற்ற 392-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
26.02.2023 அன்று காணொலி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் 26.02.2023
ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்பணிச் செம்மல் புலவர்
த. இராமலிங்கனார் தலைமையில் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு
கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்ததினராக தமிழறிஞர் திரு. துருவன் அவர்கள் கலந்து
கொண்டு, உலகத் தாய்மொழி நாள் குறித்து விரிவாகப் பேசினார். உலகத்
தாய்மொழி நாள் வருவதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் பிரிவினை.
மேற்கு பாகிஸ்தானுடைய தாய்மொழி வங்க மொழியாகும், அவர்கள் வங்க
மொழியை உருது மொழியோடு இணைத்து அரசு பயன்படுத்துவதற்கு
அங்கீகாரம் கேட்டனர். ஆனால், பாகிஸ்தான் அரசு அதை ஏற்க
மறுத்ததால் போராட்டம் வெடித்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. யுனெஸ்கோ
நிறுவனம் தலையிட்டு சமரசம் செய்து தீர்த்து வைத்தநாள் பிப்ரிவரி 21.
இந்த நாள் உலகம் முழுவதும் உலகத் தாய்மொழி நாளாக
கொண்டாடப்படுகிறது என்று பேசினார்.
தலைவர் தலைமை உரையில் பேசும் உலகத் தாய்மொழி நாள் குறித்தும்,
தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தெளிவாக உரையாற்றினார்.
திரு. சோலை தமிழினியன் அவர்கள் திரு. துருவன் அவர்களை
அறிமுகப்படுத்தியதோடு, புதிதாக இணைந்த கலைமாமணி திருமதி பார்வதி
பாலசுப்ரமணியன் அவர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு சில வார்த்தைகள்
பேசுமாறு அழைத்தார்.
சுருதிலயா நாட்டிய வித்யாலயா நிறுவனர் கலைமாமணி திருமதி பார்வதி
பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு சிறிது
நேரம் உரையாற்றினார்.
முன்னதாக செயலாளர் அவையோர் அனைவரையும் வரவேற்றார்.
துணைத் தலைவர் திரு. த. கலியமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.
