
12-06-2022-அன்று நடைபெற்ற 379-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
12.06.2022 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 379-ஆவது இணையவழிக் கூட்டம்
12.06.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கம்
தலைமையில் கூடியது.
துரை. சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார். அரிமா முனைவர் த.கு.
திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து சிறப்பு
சொற்பொழிவாளர் பேராசிரியர் முனைவர் பெ. கௌரி, தமிழ்த்துறை,
காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அவர்களை அறிமுகம் செய்து உரை
ஆற்றினார்.
முனைவர் பெ. கௌரி, பாரதியின் “ஒளிபத்த கண்ணினாய் வா! வா!”
என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
புலவர் த. இராமலிங்னார், துரை, சுந்தரராஜூலு, முயற்சி முருகேசன்,
மா. சிவஞானம் (ஆஸ்திரேலியா), குடியாத்தம் குமணன், து.சீ.
இராமலிங்கம், மறத்தமிழன், மு. ஆறுமுகப் பெருமாள், திருமதி பாரததேவி,
ச. கலியமூர்த்தி, முனைவர் க. ரேவதி ஆகியோர் முனைவர் பெ. கௌரி
அவர்களின் உரையைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பேரா. பு.பெ. இராமசாமி அவர்களின் “கண்டு சொல்-வென்று செல்”
என்னும் நிகழ்ச்சியை நடைபெற்றது.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
