22.04.2018 – அன்று நடைபெற்ற 315-வது கூட்டம்

Apr18-1 Apr18-2 Apr18-3 Apr18-4 Apr18-5 Apr18-6 Apr18-7 Apr18-8 Apr18-9 Apr18-10 Apr18-11

22.04.2018 – அன்று நடைபெற்ற 315-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
22.04.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 315-ஆவது கூட்டம், வைணவச் செம்மல்
வழக்கறிஞர் நா. வேணுகோபால் நாயகர் அவர்களது நூற்றாண்டு விழா நிறைவு நாள்,
சங்கத்தின் இணைச் செயலர் து.சீ. இராமலிங்கம் இணையரின் திருமண நாள் பொன்விழா,
கவிஞர் அழகுக் கண்ணன் அவர்களது “கம்பனின் கவிதைச் சுவை” சிறப்புரை ஆகிய
முப்பெரும் விழாவாக தலைவர் புலவர் த. இராமலிங்கம் அவர்கள் தலைமையில்
22.04.2018 அன்று நடைபெற்றது.
சிறப்புரை ஆற்றிய தலைவர் த. இராமலிங்கம், நா. வேணுகோபால் அவர்களது சிறப்பு
இயல்புகள் குறித்து தெளிவாகவும், சிறப்பாகவும் எடுத்துரைத்தார். அவரது கல்வித் தகுதி,
ஈடுபாடு கொண்ட இயக்கங்கள், அவர்தம் நீதிமன்ற பணிகள், அரசியல் ஈடுபாடு
போன்றவைகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். அவரது போராட்ட குணம், சுதந்திரம்
பெற அவரது போராட்டம் மற்றும் அவரது வெளிநாட்டு பயணங்கள், அவர் ஆற்றிய
ஆன்மீக பணிகள் இவை குறித்து விரிவாக உரையாற்றினார்.
சிறந்த வழக்கறிஞரும், வேணுகோபால் நாயகருடைய மகனுமான வே.
ராஜநாராயணன் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சிறப்பான ஒரு விழா எடுத்தது மிகவும்
மகிழ்ச்சி அடைவதாக தனது ஏற்புரையில் கூறி, வைணவம் குறித்து தொடர்
சொற்பொழிவுக்கு தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்தால் அதற்கான செலவினை ஏற்றுக்
கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.
திருமண நாள் பொன்விழா காணும் து.சீ. இராமலிங்கம் அவர்கள் தமிழ்ச்சங்கத்திற்கு
ஆற்றிவரும் பணிகள், தொலை தொடர்பு துறையில் அவரது அயராத பணி போன்ற
சிறப்புகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். இந்த இணையர் மேலும் பல ஆண்டுகள்
நலமாக வாழ வாழ்த்து தெரிவித்தார்.
து.சீ. இராமலிங்கம் தனது ஏற்புரையில், நினைவில் வாழும் திரு. தஸ்தகீர் அவர்களது
வேண்டுகோளை ஏற்று தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இணைந்தது குறித்தும், பின்னர்
அவரது வழிகாட்டல் மூலம் தமிழ்ப்பணி ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய
சிறப்பான விழா எடுத்து தன்னையும் தனது துணைவியாரையும் பாராட்டியதற்கு
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
கம்பனின் கவிதைச் சுவை என்னும் தலைப்பில் கவிஞர் அழகுக் கண்ணன், கம்பனின்
எழுத்துக்கள் குறித்து உவமை நயத்தோடு உரையாற்றினார்.
முன்னதாக துணைத் தலைவர் அமுதா பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
ஏப்ரல் மாதம் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்.
நண்பகல் உணவு அளித்த து.சீ. இராமலிங்கம், இனிப்பு வழங்கிய ச. கலியமூர்த்தி
ஆகியோர்க்கு பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி தெவிரித்தார்.
கூட்டம் இனிதே நிறைவடைந்தது.