



19-01-2020-அன்று நடைபெற்ற 337-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.01.2020 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினர்
புலவர் தமிழமுதன் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை
துணைத் தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் வழங்கினார், உடன் செயலாளர் துரை. சுந்தரராஜுலு

அரிமா துரை. சுந்தரராஜலு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறி,
ஜனவரி மாதம் பிறந் உறுப்பினர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் புலவர் தமிழமுதன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி
துணைத் தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம், செயலாளர் துரை. சுந்தரராஜுலு

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.01.2020 அன்று நடைபெற்ற கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 337-ஆவது கூட்டம், 19.01.2020
அன்று சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி வெங்கடாசலம் தலைமையில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முத்தமிழ் ஆய்வுமன்றத் தலைவர்
புலவர் தமிழமுதன் அவர்கள் கலந்து கொண்டு “தமிழர் திருநாள் –
திருவள்ளுவர் திருநாள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில் முற்காலத்தில் பொங்கல் இயற்கையை தொழுது
வாசலில் பொங்கலிட்டோம். ஆனால் இன்று அந்த வழக்கம் மறைந்து
போனது.
கனடா நாட்டு அதிபர் அந் நாட்டு தமிழர்களிடையே பொங்கல்
கொண்டாடினார். அவர் முடிக்கும்போது தமிழில் பொங்கல் வாழ்த்து
சொல்லி முடித்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.
தற்போது விளை நிலங்களை அழிக்கும் நோக்கில் ஹைட்ரோ கார்பன்
திட்டம் கொண்டு வருகிறது. இதனால் உழவுத் தொழிலே அழியும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர் பேசுகையில் கண்ணதாசன்,
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார்.
1935-ஆம் ஆண்டு நாட்டில் உள்ள பல மூத்த அறிஞர் பெருமக்கள்
ஒன்றுகூடி வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் வள்ளுவர் பிறந்த நாள்
என முடிவு செய்தனர். பின்னர் 1971-ஆம் ஆண்டில் தை முதல் நாள்
திருவள்ளுவர் திருநாள் கொண்டாடலாம் என முடிவெடுத்தது. ஆனால்
1981-ஆம் ஆண்டில் MGR அரசு சித்திரை மாதம் என்று மாற்றப்பட்டது. சாமி
தியாகராஜன் என்னும் புலவர் அனுஷ நட்சத்திரம் ஏன் மாற்றப்பட்டது எனக்
கேள்வி எழுப்பினார்.
திருவள்ளுவருக்கு சமயச்சாயம் பூசப்படுகிறது என்று கூறிய அவர் அது
தடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவர்
வள்ளுவர் என்றும் குறிப்பிட்டார். தமிழனுக்குத் தமிழனே எதிரியாகிறான்
என்று வருத்தத்தோடு கூறினார். வள்ளுவர் கூறிய ஒழுக்கம் மிக மிக
முக்கியம் என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
தலைமையேற்ற ஸ்ரீமதி வெங்கடாசலம் அவர்கள் திருக்குறளுக்கும்,
திருவள்ளுவருக்கும் பல பெயர்கள் உண்டு என்று கூறி, தலைவரை
அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜலு அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து கூறி, ஜனவரி மாதம் பிறந்த உறுப்பினர்களுக்குப்
பாராட்டுத் தெரிவித்தார்.
முனைவர் திரு. சுந்தர் அவர்கள் “உலகத் தமிழ்க்களஞ்சியம்” நூல்
குறித்து உறுப்பினர்களிடையே எடுத்துரைத்து அனைவருடைய
இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் என்று கூறி, அனைவரும் வாங்கிப்
பயனடைய வேண்டினார்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினா விடை நிகழ்ச்சி நடத்தி
வெற்றி பெற்றவர்களுக்கு நூல் பரிசளித்தார்.
நிறைவாக செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
