21-11-2021-அன்று நடைபெற்ற 365-வது கூட்டம்

21-11-2021-அன்று நடைபெற்ற 365-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
21.11.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 365-ஆவது கூட்டம் 21.11.2021 ஆம் நாளன்று
ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார் தலைமையில் கூடியது.
செயலாளர் அரிமா துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும், வரவேற்புரையும் ஆற்ற,
அரிமா முனைவர் த.கு. திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளராக தொடக்க உரை
ஆற்றினார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் திரு. பொ. சிறீ ஜீவகன் தமிழ்மணி அவர்களை அறிமுகம்
செய்து திருமதி இராமநாயகம் உரை ஆற்றினார். சிறப்புச் சொற்பொழிவாளர்
ஜெர்மனி செந்தமிழ் சீராளர் பொ. சிறீ ஜீவகன் தமிழ்மணி, காமன் நகரின் பாரதி
தமிழ்ப்பள்ளியை நிறுவி அதில் பொறுப்பாசிரியராகவும் திகழ்கிறார். “திருக்குறளில்
மானிட ஒழுக்கம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரை : 1985 முதல் தமிழ்ப்பணி ஆற்றி பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்.
திருக்குறளை பல மொழிகளில் மொழி பெயர்த்தவர். 39 விருதுகள் பெற்றதோடு
5 விருதுகளை மன்னர்களிடம் இருந்து பெற்றார். பெண்கள் சிறப்பை உணர்த்த
ஒளவை விழா நடத்தி மானிட ஒழுக்கத்தைப் பின்பற்ற உலகப் பொதுமறை வழிகாட்டும்
நூலாக திகழ்கிறது.
மனித இனம் நல்ல வண்ணம் வாழவும் வேறுபாடுகளைக் கடந்து வழிகாட்டும் நூல்.
200 ஆண்டுகளாக நன்னெறிப் பரப்பும் நூல். மனிதனை மனிதனாக உருவாக்கும்
நூல். திருக்குறள் அமைப்பு சிறப்பு வாய்ந்தது. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில்
அறவொழுக்கம் குறித்தும், அடக்கமுடமை அதிகாரத்தில் ஐம்பொறிகளை அடக்கி
வாழ்தல் குறித்தும் கூறப்பட்டுள்ளது. திருக்குறளில் மானிட ஒழுக்கம் குறித்து
கூறப்பட்டுள்ளதை பல குறள்கள் மூலம் விளக்கிக் கூறினார்.
இவரது உரையை முனைவர் க. ரேவதி, முல்லை நாச்சியார், விஜயலட்சுமி, இராம
நாயகம் (மலேசியா) ஆகியோர் வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.