01-08-2021-அன்று நடைபெற்ற 357-வது கூட்டம்

01-08-2021-அன்று நடைபெற்ற 357-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
01.08.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 357-ஆவது காணொலிக் கூட்டம்
01.08.2021-ஆம் நாள் ஞாயிறு காலை 10.30 மணிக்கு
புலவர்
த. இராமலிங்கனார் தலைமையில் நடைபெற்றது. அரிமா முனைவர் த.கு.
திவாகரன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தொடக்க உரை ஆற்றினார். செயலாளர்
துரை. சுந்தரராஜலு வரவேற்புரை ஆற்றினார்.
இன்றைய நிகழ்வில் கவிஞர் வாணிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது. இக் கூட்டத்தில் பேரா. முனைவர், இலக்கிய மாமணி,
சொற்சுவைச்சுடர் க. ரேவதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இக் கூட்டத்தில்
கவிஞர் வாணிதாசன் குடும்பத்தினர் பங்கு பெற்றனர். பலர் வாழ்த்துரையும்
வழங்கினார்.
பொருளாளர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.