
19-12-2021-அன்று நடைபெற்ற 367-வது கூட்டம்
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
19.12.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்
அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 367-ஆவது இணையவழிக் காணொலிக்
கூட்டம் 19.12.2021 ஞாயிறு காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார்
தலைமையில் கூடியது.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் தொடக்க உரை ஆற்ற, செயலாளர்
துரை. சுந்தரராஜுலு தலைமை உரையும் வரவேற்புரையும் ஆற்றினார்.
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ பாரிசு, கிருத்தியான் லக்ருவா (பன்னாட்டு
நிறுவனம்) மேனாள் நிருவாக அதிகாரி, ஐரோப்பாவில் தமிழக அரசின் அயலகத்
தமிழறிஞர் இலக்கண முதல் விருதாளர் “இக்காலத் தமிழில் இலக்கணப்
பிழைகள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சங்க உறுப்பினர்கள் வை. செல்லப்பா, சிவகுமாரன் (ஏழிசைவல்லியின்
அண்ணன்) ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புலவர். த. இராமலிங்கனார், துரை. சுந்தரராஜுலு, வினைதீர்த்தான் (காரைக்குடி)
பேரா. E.J. சுந்தர், இளங்கோ (கன்னியாகுமரி) சரஸ்வதி (ஈரோடு) ஆகியோர்
சொற்பொழிவாளரை பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
