05-12-2021-அன்று நடைபெற்ற 366-வது கூட்டம்

05-12-2021-அன்று நடைபெற்ற 366-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
05.12.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 366-ஆவது இணையவழிக் காணொலிக் கூட்டம்
05.12.2021 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்ற, அரிமா முனைவர்
துரை. சுந்தரராஜுலு வரவேற்புரை ஆற்றினார்.
திருப்புகழ் அருட்செல்வர், மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பன், MBBS. (MAHE), MOG
(UM) FAMS (New Delhi) (மகப்பேறு மருத்துவ நிபுணர் மற்றும் சோதனைக் குழாய்
குழந்தைப் பேறு நியுணர்) “காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன்” என்னும்
தலைப்பில் ஈப்போவில் இருந்து சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
பாவலர் முயற்சி முருகேசன், புலவர். த. இராமலிங்கனார், குடியாத்தம் குமணன்,
முனைவர் க. ரேவதி, ஜீவகன் (ஜெர்மனி), கவிஞர் மறத்தமிழன், பாரதி தேவி,
ஜோதிமணி ஆகியோர் பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
மருத்துவர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.