31-10-2021-அன்று நடைபெற்ற 364-வது கூட்டம்

31-10-2021-அன்று நடைபெற்ற 364-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
31.10.2021 அன்று இணைய வழி மூலம்
நடைபெற்ற கூட்டம்

அண்ணநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 364-ஆவது இணையவழிக் கூட்டம் 31.10.2021
ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு புலவர் த. இராமலிங்கனார் தலைமையில்
கூடியது.
புலவர் த. இராமலிங்கனார் தலைமை உரை ஆற்ற, அரிமா முனைவர் துரை.
சுந்தரராஜூலு வரவேற்புரை ஆற்றினார்.
அரிமா முனைவர் த.கு. திவாகரன் சிறப்புச் சொற்பொழிவாளர் கவிஞர் முல்லை
நாச்சியார் அவர்களை அறிமுகம் செய்து தொடக்க உரை நிகழ்த்தினார்.
திருமதி கவிஞர் முல்லை நாச்சியார் (எழுத்தளார், சொற்பொழிவாளர்) “டென்மார்க்
தமிழர் வாழ்வியலும் இலக்கியங்களும்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முனைவர் க. ரேவதி, இராம நாயகி, ரமேஷ் பாபு (எத்தியோப்பியத் தமிழ்ச்சங்கம்),
துரை. சுந்தரராஜூலு, மணிமேகலை ஆகியோர் சிறப்புரை ஆற்றிய கவிஞர் முல்லை.
நாச்சியாரை பாராட்டியும், வாழ்த்தியும் பேசினர்.
கவிஞர் முல்லை. நாச்சியார் ஏற்புரை ஆற்றினார்.
பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.