18.03.2018 அன்று நடைபெற்ற 314-வது கூட்டம்

mar18-1 mar18-2 mar18-3 mar18-4 mar18-5 mar18-6 mar18-7

18.03.2018 அன்று நடைபெற்ற 314-வது கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
18.03.2018 அன்று நடைபெற்ற கூட்டம்

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் 314-ஆவது கூட்டம், 18.03.2018
அன்று சங்கத்தின் துணைத்தலைவர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன்
தலைமையில் நடைபெற்றது. உலகத் திருக்குறள் பேரவைப்
பொருளாளர் திரு. வெ. இராமமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார்.
தலைவர் முன்னுரையில், சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து
தலைமையுரை ஆற்றினார்.
“திருமழிசை ஆழ்வாரின் அன்பு நெறி” என்னும் தலைப்பில்
உரையாற்றிய திரு. வெ. இராமமூர்த்தி அவர்கள், ஆழ்வாரிகளின்
பெருமைகளை எடுத்து உரைத்து, தேவன் ஒருவனே, ஒன்றே குலம்
ஒருவனே தேவன், அவனை அன்பினால் மட்டுமே காண முடியும்.
அதற்காக நாம் பொறி புலன்களால் எழும் பற்றினைத் துறந்து, அரக்கு
இலச்சியினால் மூடி நல்வழிகளுக்குத் திறக்க வேண்டும். உன்னைத்
தவிர வேறு சரண் இல்லை என்று இறைவனிடம் அடைக்கலம் புகுவதே
சரணாகதி தத்துவத்தின் உயிர்க் கொள்கை. இவர் காட்டும் அன்பு நெறி,
அடைக்கலம், உள்ளத்தூய்மை, அடிமை செய்தல் ஆகியவற்றால்
உள்ளத்தைப் பெரும் கோயிலாக்கி வழிபடுதல் அனைவருக்கும்
வேண்டற்பாலன கற்போம், அறவழியில் நிற்போம் என்று விரிவாக
உரையாற்றினார்.
முன்னதாக, செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன் பச்சையப்பன்
கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் திரு. சொ. பரமசிவம்
மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.மார்ச் மாரதம் பிறந்தநாள் கண்ட
உறுப்பினர்கள் பாராட்டப் பெற்றனர்.
முனைவர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தி
பரிசுகள் வழங்கினார். பொருளாளர் தி. ரங்கராஜன் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவடைந்தது.